ஆனைமலை புலிகள் காப்பக சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள டாப்சிலிப் - பரமக்குளம் இடையேயான சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக, அவ்வழியாக செல்லும் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வனத்துறை அறிவுறுத்தல்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி மற்றும் உடுமலை அமராவதி என ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு மற்றும் மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் மற்றும் அரிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.



தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன.



இந்நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கும் கேரளா வனப்பகுதியான ஆணைப்பாடி எல்லைப் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் வந்துள்ளது இதை அவ்வழியாகச் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.



மேலும் இந்த வீடியோவை கண்ட வனத்துறையினர் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலா பயணிகள் வழிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க ஆனைமலை புலிகள் காப்பக வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...