பொள்ளாச்சி அருகே கோவிலை அப்புறப்படுத்தும் நோட்டீசை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

பொள்ளாச்சி அண்ணா நகர் அருகேயுள்ள கருப்பராயன் கன்னிமார் கோவிலை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கண்டித்து கோவில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோவிலை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீஸை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த அண்ணா நகர் பகுதியில் இருந்து கள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் பழமையான கருப்பராயன் கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகாலமாக கோவிலில் அங்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோவிலை அப்புறப்படுத்த கோரி, நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள நோட்டீஸில் அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் கோவிலை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை கண்டித்து பூசாரி சந்திரன் கோவில் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் திரண்டு பஜனை பாடல்களை பாடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கருப்பராயன் கன்னிமார் கோயில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மரத்தடியின் கீழே இருந்தது கோவிலுக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது கோவில் அருகேயுள்ள தனியார் லே-அவுட் உரிமையாளர் வழித்தடம் வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதன் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டு கோவிலை அப்புறப்படுத்த கூறியதாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் கோவிலை அப்புறப்படுத்த விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...