கோவையில் மனித-விலங்கு மோதலை தடுக்க 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்த முடிவு!

பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பூச்சியூர் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து தொடர்பான ஆட்சியர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.



கோவை: கோவையில் மனித - விலங்கு மோதலை தடுக்க 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பூச்சியூர் பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்தது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம், நாயக்கன்பாளையம் தெற்கு சுற்று, தடாகம் காப்புக்காட்டிற்கு வெளியே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கூடலூர் தெற்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பட்டா நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் இன்று காலையில் சுமார் 25 வயதுடைய ஆண் யானை ஒன்று தலையை வைத்து உரசிய போது கம்பம் உடைந்து சரிந்ததில், மின் கம்பிகள் யானை மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.



இந்நிகழ்வினை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள் (வடக்கு மற்றும் தெற்கு) ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

வனப்பகுதியை ஒட்டிய 1 கி.மீ. முதல் அதிகபட்சமாக 5 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளை வரைப்படங்களில் வரையறுத்து அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்களை கண்டறிந்து உடன் சரிசெய்தல்.

மேலும், இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க வனங்களை ஒட்டிய பகுதிகளில் உயர் மின்கம்பங்கள் அமைத்தல், காப்பிடப்பட்ட மின்கம்பிகளை பயன்படுத்துதல், மின்கம்பங்களை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்ற வழிமுறைகளை வகுத்து தொலைநோக்கு தொலைநோக்கு நடவடிக்கை மேற்கொள்வது.

வனத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் மின் வேலிகள் மற்றும் மின்கம்பிகள் ஆய்வு செய்ய கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுப்புலத்தணிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது மற்றும் மனித-வனவிலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பதை குறித்து வருவாய் வட்ட அளவில் வட்டாச்சியர், வனச்சரக அலுவலர், காவல் ஆய்வாளர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...