உடுமலை - பழனி சாலையில் உள்ள சன் ஹோட்டலில் நடைபெற்ற வட்ட சட்டபணிகள் குழு சார்பிலான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி, உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கேர் டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உடுமலை - பழனி சாலையில் அமைந்துள்ள சன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த சட்ட கருத்துரைகளை வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், சத்தியவாணி, மகாலட்சுமி, தம்பி பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.

இதில், கேர் டி நிறுவன ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் மக்களமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின், கேர் டி நிறுவனத்தின் பஞ்சாலை பயிற்சியாளர் லீனா ஜஸ்டின், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் முதியோர் உதவி எண்ணின் மாவட்ட களப்பொறுப்பு அலுவலர் மைதிலி, சார்க்.டிரஸ்ட் தலைவர் சாமிநாதன் துரை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஆணைய பணியாளர்கள் மற்றும் தீபம் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி, உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கேர் டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
உடுமலை - பழனி சாலையில் அமைந்துள்ள சன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த சட்ட கருத்துரைகளை வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், சத்தியவாணி, மகாலட்சுமி, தம்பி பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.
இதில், கேர் டி நிறுவன ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் மக்களமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின், கேர் டி நிறுவனத்தின் பஞ்சாலை பயிற்சியாளர் லீனா ஜஸ்டின், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் முதியோர் உதவி எண்ணின் மாவட்ட களப்பொறுப்பு அலுவலர் மைதிலி, சார்க்.டிரஸ்ட் தலைவர் சாமிநாதன் துரை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஆணைய பணியாளர்கள் மற்றும் தீபம் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.