உக்கடம் அருகே 5 டன் ரேஷன் அரிசி கடத்தல் - லாரி உட்பட 8 வாகனங்கள் பறிமுதல்!

உக்கடம் அருகே இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்ல முயன்ற லாரி உட்பட எட்டு வாகனங்களை பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே 5 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற 8 வாகனங்களை குடிமைப் பொருள் பழங்கள் துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை, சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் IPS பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் இன்று (25.03.2023) அதிகாலை 05.00 மணியளவில் கோயம்புத்தூர் பகுதிகளில் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் 2 குழுவாக பிரிந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.



இதனிடையே உக்கடம் - செல்வபுரம் சாலையில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி சுமார் 50 கிலோ வீதம் 60 மூட்டையில் என மொத்தம் 3000 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை செய்த போது தெற்கு உக்கடம் அண்ணா நகரை சேர்ந்த அபி என்கின்ற அபிப் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரிய வந்தது. அபி என்கின்ற அபிப் ரஹமான் தலைமறைவாகி உள்ளார். இவர் ஏற்கனவே எட்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்துள்ளார்.



இதேபோல், மதுக்கரை மரப்பாலம் அருகே SI கலைச்செல்வன் தலைமையான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பொழுது அவ்வழியாக வேகமாக வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ வீதம் 40 மூட்டைகளில் சுமார் 2000 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர் ராஜேஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் குனியமுத்தூர் P.K புதூரை சேர்ந்த குட்டி ராஜேந்திரன், அவரது அண்ணன் மகன் சூர்யா மற்றும் வாளையாறை சேர்ந்த சபீர் ஆகிய மூவரும் குனியமுத்தூர் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கள்ளத்தனமாக கேரளாவில் விற்பனை செய்து வரும்படி அனுப்பியதாகவும் தெரியவந்தது.



மேற்கண்ட இரண்டு வழக்குகளிலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட எட்டு வாகனங்கள் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாகியுள்ள அபி என்கின்ற அபிப்ரகுமான், குட்டி ராஜேந்திரன், சூர்யா, மற்றும் சபீர் ஆகிய நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...