தாராபுரம் நகராட்சி பள்ளியில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் கயல்விழி!

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சித்ராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நகராட்சி பள்ளியில் அங்கன்வாடி கட்டிடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சித்தராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில் சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே அங்கன்வாடி கட்டிடப் பணியில் முழுவதும் நிறைவடைந்த நிலையில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.



மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகராட்சி ஆணையாளர் ராமர் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் திமுக கவுன்சிலர்கள் கமலக்கண்ணன் மற்றும் சரஸ்வதி ராஜேந்திரன், ஷாலினி பவர் சேகர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில், தமிழகத்தில் எண்ணற்ற நல்ல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது. தேர்தல் வாக்குறுதியில் அளிக்காத சில நல்ல திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது, என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...