தென்னம்பாளையம் அருகேயுள்ள டி.எம்.சி காலனியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாவிட்டால் சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய நேரிடும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் அருகே ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ செல்வராஜ், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பல்லடம் சாலை தென்னம்பாளையம் அடுத்த டி.எம்.சி காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதி குடியிருப்புகளுக்குள் மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து புகுந்தது.
இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தூய்மை பணியாளர்கள் குடியிருக்கும் இப்பகுதியில் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

மேலும் ஊர் முழுவதும் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணிப்பது போல் தோன்றுவதாகவும் இதே நிலை நீடித்தால் அதிகாரிகளின் அலட்சிய போக்கு குறித்து சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இனியும் இதுபோன்று குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பல்லடம் சாலை தென்னம்பாளையம் அடுத்த டி.எம்.சி காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதி குடியிருப்புகளுக்குள் மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து புகுந்தது.
இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தூய்மை பணியாளர்கள் குடியிருக்கும் இப்பகுதியில் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக தெரிவித்தார்.
மேலும் ஊர் முழுவதும் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணிப்பது போல் தோன்றுவதாகவும் இதே நிலை நீடித்தால் அதிகாரிகளின் அலட்சிய போக்கு குறித்து சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இனியும் இதுபோன்று குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.