தென்னம்பாளையத்தில் திருப்பூர் மேற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் ஆய்வு - அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

தென்னம்பாளையம் அருகேயுள்ள டி.எம்.சி காலனியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாவிட்டால் சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய நேரிடும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் அருகே ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ செல்வராஜ், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பல்லடம் சாலை தென்னம்பாளையம் அடுத்த டி.எம்.சி காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதி குடியிருப்புகளுக்குள் மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து புகுந்தது.

இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தூய்மை பணியாளர்கள் குடியிருக்கும் இப்பகுதியில் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக தெரிவித்தார்.



மேலும் ஊர் முழுவதும் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணிப்பது போல் தோன்றுவதாகவும் இதே நிலை நீடித்தால் அதிகாரிகளின் அலட்சிய போக்கு குறித்து சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

இனியும் இதுபோன்று குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...