ஆஸ்கர் தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் தர்மபுரி குட்டியானை - வைரல் வீடியோ!

தர்மபுரியில் கிணற்றில் இருந்து இருந்து மீட்கப்பட்ட நான்கு மாத குட்டியானையை, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் தம்பதியான பொம்மன் - பெள்ளி இருவரும் பராமரித்து வருகின்றனர். குட்டியானையோடு தம்பதி கொஞ்சி விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



நீலகிரி: தர்மபுரியில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் வனத்துறையினர், அந்த குட்டி யானையை மீட்டனர்.

பின்பு ஒரு வார காலமாக வனத்துறையினர் குட்டியை பாதுகாத்து வந்த நிலையில், தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இந்த முயற்சி பலனளிக்காத நிலையில், குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 17ஆம் தேதி முதுமலை யானைகள் முகாமிற்க்கு கொண்டு வந்தனர். இந்த குட்டி யானையை "தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்" திரைப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகிய இருவரும் பராமரிக்க அரசு உத்தரவிட்டது.



அதன்படி ஒப்படைக்கப்பட்ட அந்த குட்டி யானை ஆஸ்கார் விருது தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வனத்துறை செயலர் சுப்ரியா சாகு டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...