திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக குண்டும் குழியுமான சாலைகளில் சிக்கிக் கொண்ட வாகனங்கள், பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் பள்ளங்களில் சிக்கிக் கொண்டன.

குறிப்பாக ஊத்துக்குளி சாலை, ரயில்வே கேட் பகுதி, அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளில் சிக்கிக்கொண்ட வாகனங்கள் அவ்வழியே வந்த சரக்கு வேன் மூலம் கயிறை கொண்டு பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, ஊத்துக்குளி ரயில்வே கேட், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஊத்துக்குளி சாலை, ரயில்வே கேட் பகுதி, அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளில் சிக்கிக்கொண்ட வாகனங்கள் அவ்வழியே வந்த சரக்கு வேன் மூலம் கயிறை கொண்டு பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக, ஊத்துக்குளி ரயில்வே கேட், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.