கொளுத்தும் கோடை வெயில் - உடுமலையில் மண்பானை விற்பனை ஜோர்!

கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவம், குழாய் பொருத்தியது உள்ளிட்ட மண்பானைகள், 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வடிவம் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பதாக உடுமலை மண்பானை வியாபாரிகள் தெரிவித்தனர்.



திருப்பூர்: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பிற்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. இதனால் வீடுகளில் இருப்பவர்கள், வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்களும் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

உடல் சூட்டை சீராக்கும் வகையில், இளநீர், பழச்சாறு உள்ளிட்டவைகளை மக்கள் நாடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், குளிர்ந்த தண்ணீரை குடிப்பதற்காக, உடுமலைப் பகுதி மக்கள், மண்பானைகள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர்.



இதையொட்டி, உடுமலையில் தண்ணீர் பானைகள் கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவம், குழாய் பொருத்திய மண்பானை என பல்வேறு வடிவங்களில் மண்ணால் ஆன பாத்திரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.



10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் வடிவம் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இது குறித்து மண்பானை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு என பொதுமக்கள் மண்பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 100 பானைகள் விற்பனையாகிறது, என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...