கோவையில் அயர்னிங் கடையில் பாய்லர் வெடித்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் வணிக வளாக மாடியில் ஸ்டீமிங் முறையில் துணிகளை அயர்ன் செய்யும் கடையில் பாய்லர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் சிக்னல் அருகே மகாதேவ் எலக்ட்ரிக்கல் என்ற கடை அமைந்துள்ள மாடியில் ஸ்டீமிங் முறையில் துணியில் அயர்ன் செய்து கொடுக்கும் கடை இயங்கி வருகிறது.



இந்த கடையில் ஸ்டீமிங் செய்வதற்காக வைத்திருந்த பாய்லர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மளமளவென பரவிய தீ குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.



அதற்குள் உள்ளே இருந்த துணிகள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது.



திருச்சி பிரதான சாலையோரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்படும்போது உள்ளே ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...