கோவைப்புதூர் அருகே பைக் மின்கம்பம் மீது மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாவிஷ் (23), கோவை பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பாவிஷ் உயிரிழந்தார்.


கோவை: கோவைப்புதூர் பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் தக்கார் பாபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் கூலித்தொழிலாளி. இவரது மகன் பாவிஷ் (23). இவர் பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் பாவிஷ் கோவைப்புதூரில் தனியாக அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஹரிகரன் என்ற மாணவருடன் பாவிஸ் பைக்கில் சென்று விட்டு, மீண்டும் அறைக்குத் திரும்ப பைக்கில் வந்துள்ளனர். அப்போது ஹரிகரன் பைக்கை ஓட்டியுள்ளார். புட்டு விக்கி சாலையிலிருந்து கோவைப்புதூர் நோக்கி வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை ஓரத்திலிருந்த மின் கம்பம் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த பாவிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பாவிஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...