கோவை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

கோவை மாவட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை கலைதல், காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், ஆனைமலை, அன்னூர் ஆகிய பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து உப்பிலிப்பாளையம் சிக்னல் வரை வரிசையாக நின்று பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை முன் வைத்தனர்.



இந்த மனித சங்கிலி போராட்டத்தில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும், முடக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் நியமான முறைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான ஜெகநாதன், பாலசுப்பிரமணியன், ஆனந்த், அரசு, கலைவாணன், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...