மேட்டுப்பாளையத்தில் சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!

மேட்டுப்பாளையம் அருகே எஸ்.எம் நகர் முதல் பத்ரகாளியம்மன் கோவில் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால், அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்திர காளியம்மன் கோவிலுக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட எஸ்.எம் நகர் முதல் பத்ரகாளியம்மன் கோவில் வரை செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாக சிதிலம் அடைந்து காணப்படுகின்றன.

இந்த சாலையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சாந்திவனம் உள்ளது. இதனால் தினமும் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பலர் வந்து செல்கின்றனர்.

இதுதவிர மற்ற வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் இந்த சாலையானது பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருப்பதால் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

3 நாட்களுக்கு ஒருமுறை மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ, கார் மற்றும் அரசு பேருந்துகள் சாலையில் உள்ள குழிகளில் விழுந்து சிக்கி அவ்வப்போது போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.



இதனிடையே சம்பவத்தன்று மேட்டுப்பாளையத்திலிருந்து வனபத்திர காளியம்மன் கோவிலுக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று எஸ்.எம்.நகரில் உள்ள சாலை பள்ளத்தில் சிக்கியது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து சாலை மிகவும் மோசமாக உள்ள தால் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...