கோவையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.



கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என்.மில்ஸ், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில், மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பயன்படுத்த முடியாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் ராமகிருஷ்ணா மிஷின் அருகில், கார் ஒன்று நேற்று நள்ளிரவு பாலத்திற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த இருவர் உயிர் தப்பினர். காரில் கோவையை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அசோக் ஆகிய இருவர் பயணித்துள்ளனர்.



இருவரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று கொண்டிருக்கையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும் காரை ஓட்டி வந்த சுப்பிரமணி என்பவர், தூக்கத்தில் இருந்ததாகவும் அதனால் விபத்து நிகழ்ந்ததாகவும், மேலும் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் அருகே தடுப்புகள் அமைக்கப்படாததே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...