நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணம் - சமூக வலைதளங்களில் குவியும் இரங்கல்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம், நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 85.


தமிழ் திரையுலகில் 'தல' என ரசிகளால் கொண்டாடப்பட்டு வரும் அஜித்குமார் அண்மையில் நடித்து வெளியான, ‘துணிவு’ படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், அவரது தந்தையால் சுப்பிரமணியம் இன்று காலை மரணமடைந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த மணி என்கிற சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 85. மறைந்த சுப்பிரமணியத்திற்கு மோகினி என்ற மனைவியும், அஜித்குமாருடன் அனில் குமார், அனூப் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர்.

அஜித்குமாரின் தந்தையார் மறைவு செய்த கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரங்கல்கள் குவிந்துவருகின்றன. இதேபோல் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் அஜித்தின் தந்தை மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தமிழ் திரையுலகினர் பலரும் தந்தையார் மறைவுக்காக அஜித்திடம் இரங்கல் தெரிவித்துவருகீன்றனர். மறைந்த அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

தந்தையின் மரணம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தந்தையின் இறுதிசடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். இறுதி சடங்கை தனிப்பட்ட முறையில் குடும்ப நிகழ்வாக நாங்கள் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...