ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை தீர்ப்பு - பொள்ளாச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

அவதூறு வழக்கில் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



கோவை: கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எல்லா திருடர்களும் ஏன் மோடி என பெயர் வைத்துள்ளனர் என ராகுல்காந்தி பேசினார். மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தொடர்ந்து ராகுல் காந்திமீது, மோடி அரசு திட்டமிட்டு பொய் வழக்குகளை பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...