கோவை அரசு பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் திருட்டு - போலீஸ் விசாரணை

கோவையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஆர்எஸ் புரத்தை சேர்ந்த மூதாட்டி யசோதாவிடம், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபரை சாய்பாபா காலனி போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மாநகரில் அடிக்கடி பேருந்து பயணிகளை குறிவைத்து தங்க நகைகளை திருடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி இவரது மனைவி யசோதா (வயது65). இவர் நேற்று மருத்துவமனைக்கு செல்ல கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருந்து சாய்பாபா காலனிக்கு செல்ல 11டி என்ற அரசு பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது, சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது யசோதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேருந்தில் பெண் பயணிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...