திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமை தாங்கினார்.
இதில், மோடி மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி குஜராத் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாரதிய ஜனதா கட்சியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.