திருப்பூர் ரேஷன் கடையில் 2 மற்றும் 5 கிலோ சிலிண்டர் விநியோகம் இன்று முதல் துவக்கம்!

திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் இன்று முதல் 2 மற்றும் 5 கிலோ அளவிலான சிலிண்டர் விநியோகம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான வரவேற்பை தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அரண்மனைபுதூர் அருகேயுள்ள ரேஷன் கடையில் இன்று முதல் 2 கிலோ மற்றும் ஐந்து கிலோ சிலிண்டர் விநியோகம் திட்டம் துவங்கப்பட்டது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற கேஸ் ஏஜென்சிகளில் ஆதார் எண் முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனிடையே திருப்பூர், சென்னை, கோவை போன்ற இடங்களுக்கு வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால், சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகின்றனர்.

அதேபோல் வெளி மாநில தொழிலாளர்கள் தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு ஒன்று என்ற நியாய விலை கடையில் இந்த திட்டமானது இன்று துவங்கப்பட்டது.



இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில், இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.



வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம்.

தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இந்த திட்டமானது இந்த கடையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதன் வரவேற்பை பொறுத்து விரைவில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...