ஆசிட் வீச்சு விவகாரம்: ஆசிட்டை விற்பனை செய்தது யார் என விசாரிக்க வேண்டும் - மாதர் சங்கம் வலியுறுத்தல்!

கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் சுகந்தி, வீசப்பட்ட ஆசிட்டை விற்பனை செய்தது யார் என்பதையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: கோவையில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது வீசப்பட்ட ஆசிட்டை விற்பனை செய்தது யார் என விசாரிக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் சுகந்தி தெரிவித்துள்ளார்.



கோவை நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவரே இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவிதாவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுகந்தி இன்று மாலை சங்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் சுகந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது,

நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இதற்கு முன்பு காதலிக்க மறுத்ததால், காதலித்து விட்டு கைவிட்டால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இன்று மனைவியின் மீதே கணவர் ஆசிட் வீசிய கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேசினோம். தமிழகத்தில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது.

ஆனால் நீதிமன்றத்திற்கு உள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அதிர்ச்சியுடன் பார்க்கிறோம்.

நீதிமன்றத்திற்கு விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு வரும் பெண்கள் அதிகம். பெண்கள் நீதிமன்றம் போகும் போது பாதுகாப்பற்ற நிகழ்வு நடந்தால் பெண்கள் எங்கு சென்று தங்கள் பிரச்சினைகளை வைக்க முடியும்?.

இந்தியாவில் குடும்ப வன்முறை நடப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது போன்ற வன்முறைகளை குறைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்கள் பாதுகாப்பான வளாகங்களாக இருக்க வேண்டும்.

அமிலங்கள் எங்கு விற்கப்படுகிறது? இவர் யாரிடம் அமிலம் வாங்கினார்கள்? என்பதும் பார்க்கப்பட வேண்டும். அமிலத்தை விநியோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...