தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்மபிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியானது தாராபுரம் நகரின் முக்கிய வீதிகளாக 5 சாலை சந்திப்பு, வட்டாட்சியர் அலுவலகம் சாலை வழியாக நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது.
இதில் நீதிபதிகள்,தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, கூடுதல் கண்காணிப்பாளர் தனராசு, தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.