ஹோலி முடிந்து திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் - காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு!

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்தில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூருக்கு திரும்பிவரும் வடமாநில தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான சில வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும் ஹோலி பண்டிகை என்பதால் மீதம் இருந்த வடமாநில தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகைக்காக சென்றிருந்தனர்.



இந்நிலையில், பண்டிகை முடிந்து தற்போது வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



வடமாநில தொழிலாளர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்திய போலீசார், அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகள் குறித்தும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...