பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 7 சவரன் நகைக் கொள்ளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வேலுச்சாமி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் காலனியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்வேலுச்சாமி (வயது82). இன்று அதிகாலையில் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பெரிய நாயகிஇருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.



அப்போது ஆள்நடமாட்டம் இருப்பதை உணர்ந்த வேலுச்சாமி, எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியில் ஓடினர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வேலுச்சாமி அளித்த தகவலின்பேரில், அங்கு விரைந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



மேலும், அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் நடந்த இந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...