புதிய பேருந்து நிலையத்தில் துப்புரவுப் பணிகள் - தாராபுரம் நகராட்சித் தலைவர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுகிறார்களா? என நகரராட்சித் தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார். 18 வது வார்டில் சாக்கடை கால்வாய், சாலை வசதி, தெரு விளக்கு பராமரிப்பு செய்வது குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.


திருப்பூர்: தாராபுரம் பஸ் நிலையம் பகுதியில் டீ கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து ஏராளமான குப்பைகள் தினம் தோறும் விழுகின்றன.

அத்துடன் புதிய பஸ் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள் பயன்படுத்தும் குளிர்பானங்கள் மற்றும் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்.



இந்த குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுகிறார்களா? என நகரராட்சித் தலைவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தாராபுரம் 18 வது வார்டில் அடிப்படை வசதிகளான சாக்கடை கால்வாய், சாலை வசதி, தெரு விளக்கு பராமரிப்பு செய்வது குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின்போது, திமுக நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி பொறியாளர் சண்முக வடிவு, உதவி பொறியாளர் காளீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகரவை தலைவர் கதிரவன், கவுன்சிலர் செல்லின் பிலோமீனா ஜான்பால், வார்டு செயலாளர் ஜெரால்டு, நகர மாணவரணி துணை அமைப்பாளர் தில்லை முத்து, குடிநீர் மேற்பார்வையாளர் சுப்பிரமணி, துப்புரவு அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...