கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோகபுரம், குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், தடாகம், பன்னிமடை உள்ளிட்ட ஊராட்களில் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
கோவை: தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை பன்னிமடை ஊராட்சியில் ஒன்றியக் கவுன்சிலர் மற்றும் ஊராட்சி கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சோமையம்பாளையத்தில் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.

அதேபோல் தடாகத்தில் ஊராட்சி தலைவர் சவுந்திரவடிவு ஆன்ந்தன் தலைமையிலும், நஞ்சுண்டாபுரத்தில் ஊராட்சித் தலைவர் கார்த்திகேஸ்வரி விகேவி சுந்தர்ராஜன் தலைமையிலும், குருடம்பாளையத்தில் ஊராட்சித் தலைவர் ரவி தலைமையிலும்,
அசோகபுரத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபைக் கூட்டங்களில் தண்ணீர் சிக்கனம் குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை பன்னிமடை ஊராட்சியில் ஒன்றியக் கவுன்சிலர் மற்றும் ஊராட்சி கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சோமையம்பாளையத்தில் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
அதேபோல் தடாகத்தில் ஊராட்சி தலைவர் சவுந்திரவடிவு ஆன்ந்தன் தலைமையிலும், நஞ்சுண்டாபுரத்தில் ஊராட்சித் தலைவர் கார்த்திகேஸ்வரி விகேவி சுந்தர்ராஜன் தலைமையிலும், குருடம்பாளையத்தில் ஊராட்சித் தலைவர் ரவி தலைமையிலும்,
அசோகபுரத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கிராம சபைக் கூட்டங்களில் தண்ணீர் சிக்கனம் குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.