'வந்தே பாரத்' ரயில் சேவை - கோவை ரயில் பயணிகள், தொழில்துறையினர் வரவேற்பு!

கோவையிலிருந்து சென்னை வரை 'வந்தே பாரத்' ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. கோவையில் புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னை வரை இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தொழில் நகரான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் 'பாயிண்ட் டூ பாயிண்ட்' பிரிவில் இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் என 5 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு சென்னைக்கு ரயில் சேவை வழங்கப்படுகிறது.

கேரளாவிலிருந்து கோவை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களை சேர்த்து தினமும் கோவையிலிருந்து 15 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆன்மிகம், சுற்றுலா, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக கோவை மாவட்டத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.



இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை கோவை வழித்தடத்தில் தொடங்க வேண்டும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் கோவை - சென்னை வழித்தடத்தில் விரைவில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதற்கு ரயில் பயணிகள் மற்றும் தொழில்துறையினர் வரவேற்பு தெரிவிதுள்ளனர்.

கோவை மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஜமீல் அகமது கூறுகையில்,"வந்தே பாரத் ரயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பகல் நேரத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்சேவையை போல் இரவில் படுக்கை வசதியுடன் கூடிய முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் வசதியுடன் கூடிய ரயில் சேவையையும் தொடங்க வேண்டும்.

கோவையிலிருந்து- மதுரை மற்றும் பெங்களூருவுக்கு இரவு நேரங்களில்

‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ முறையில் ரயில் சேவை தொடங்க வேண்டும்"என்றார்.

கொங்கு குளோபல் போரம்(கேஜிஎப்) இயக்குநர், நந்தகுமார் கூறுகையில், "வந்தே பாரத் ரயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது மிகுந்த வரவேற்கத்தக்கது. கோவை -சென்னை வழத்தடத்தில் பேருந்து சேவையை விட ரயில்சேவையை பயன்படுத்தவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். கோவையிலிருந்து -பெங்களூரூவுக்கும் இரவு நேர ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

போத்தனூர் ரயில் பயனாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில்,"கோவை -சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது. கோவையிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

கோவை - சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள்: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை

சேவை: புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் அனைத்து நாட்கள்.

கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும். மீண்டும் சென்னையில் மதியம் 2.20மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும் என உத்தேச தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...