மனு அளிக்க வந்த மக்களை காக்க வைத்த விவகாரம் - தாராபுரத்தில் பெண் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை கண்டுகொள்ளாமல், உயர்அதிகாரிக்கு மதிய உணவு ஆர்டர் செய்த வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம், அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. இவர் கடந்த 17-ந் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது அவருக்கு உயர் அதிகாரியிடம் இருந்து போன் வந்தது. இதையடுத்து, தனலட்சுமி, தனியார் ஓட்டலில் உயர்அதிகாரிக்கு உணவு வாங்கி வரும்படி உணவு பட்டியலை உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.

பின்னர் ஓட்டலுக்கு சென்ற உதவியாளரிடம் செல்போனில் உணவு வகைகள் குறித்து ஒன்றன்பின் ஒன்றாக கூறிக்கொண்டே இருந்துள்ளார்.



இதனால் மனுகொடுக்க வந்த மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதால் அதிருப்தி அடைந்ததோடு, தனலட்சுமியின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகப் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், தாராபுரம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் வருவாய் கிராமத்துக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அலங்கியம் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணனை தாராபுரத்துக்கு நியமித்து உத்தரவிட்டார். மனு கொடுக்க வந்த பொதுமக்களை காக்க வைத்துவிட்டு, உயர் அதிகாரிக்கு உணவு ஆர்டர் செய்ததாக பெண் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...