அத்திக்கடவு-அவிநாசி குடிநீர்த் திட்டக்குழாயில் உடைப்பு - 30 அடி உயரத்திற்கு பீச்சியடித்த தண்ணீர்!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டக்குழாயில் சோதனை ஓட்டத்தின்போது ஏற்பட்ட திடீர் உடைப்பால், சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சிஅடித்து வெளியேறியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.



கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே குன்னத்தூரம்பாளையத்தில் அத்திக்கடவு -அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டல் திட்டத்தின் 6வது நீர்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி சோதனை ஓட்டத்திற்காக இங்குள்ள 5வது நீர் ஏற்றும் நிலையத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்படி குன்னத்தூரம்பாளையம் குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், அங்குள்ள உள்ள 6 மின்மோட்டார்களில், ஒரு மோட்டாரில் நேற்று நீரேற்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அன்னூரில் இருந்து இத்திட்டத்திற்கு செல்லும் பிரதான குழாய்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கான சோதனை நடத்தப்பட்டது.



அப்போது, வடவள்ளி ஊராட்சி பெரிய புதூரில் உள்ள பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, அன்னூர் - காரமடை சாலையில் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சிஅடித்து வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அங்குள்ள சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



குழாய் உடைப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் சோதனை ஓட்டத்திற்காக தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதேபோல், குருக்கிளியம்பாளையம், சாலையூர் பகுதிகளிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடியது. இதையடுத்து, தொடர்புடைய அதிகாரிகள், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வுவ செய்து, பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...