கோவை மாநகராட்சி முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 26ஆவது மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை: காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 26ஆவது மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகராட்சி ஆணையருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ள நிலையில் தற்போது தமிழக முதல்வர் வரலாறு காணாத வகையில், ரூ.9,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம், தாவரவியல் பூங்கா மற்றும் தகுதியுள்ள மகளிருக்கு மாதம் தோறும் உதவித்தொகை ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய வளர்ச்சிப் பணிகளை கோயமுத்தூருக்கு வழங்கி உள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அனைத்து வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை, தூய்மைப்பணிகளில் தொய்வு உள்ளிட்ட சூழ்நிலைகள் தான் நிலவுகிறது.
இதையும் தாண்டி தற்பொழுது நாளை முதல் தூய்மை பணியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதால் மிகப் பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே இதை தடுக்கும் வகையிலும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் உடனடியாக அனைவரையும் அழைத்துப் பேசி தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ள நிலையில் தற்போது தமிழக முதல்வர் வரலாறு காணாத வகையில், ரூ.9,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம், தாவரவியல் பூங்கா மற்றும் தகுதியுள்ள மகளிருக்கு மாதம் தோறும் உதவித்தொகை ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய வளர்ச்சிப் பணிகளை கோயமுத்தூருக்கு வழங்கி உள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அனைத்து வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை, தூய்மைப்பணிகளில் தொய்வு உள்ளிட்ட சூழ்நிலைகள் தான் நிலவுகிறது.
இதையும் தாண்டி தற்பொழுது நாளை முதல் தூய்மை பணியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதால் மிகப் பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே இதை தடுக்கும் வகையிலும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் உடனடியாக அனைவரையும் அழைத்துப் பேசி தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.