கோவை தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.! - கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சி முழுவதும்‌ நாளை முதல்‌ காலவரையற்ற வேலை நிறுத்தம்‌ செய்வதாக தூய்மை பணியாளர்கள்‌ அறிவித்துள்ள நிலையில்‌, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 26ஆவது மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


கோவை: காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 26ஆவது மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகராட்சி ஆணையருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி முழுவதும்‌ நாளை முதல்‌ காலவரையற்ற வேலை நிறுத்தம்‌ செய்வதாக தூய்மை பணியாளர்கள்‌ அறிவித்துள்ள நிலையில்‌ தற்போது தமிழக முதல்வர்‌ வரலாறு காணாத வகையில்‌, ரூ.9,000 கோடியில்‌ மெட்ரோ ரயில்‌ திட்டம்‌, தாவரவியல்‌ பூங்கா மற்றும்‌ தகுதியுள்ள மகளிருக்கு மாதம்‌ தோறும்‌ உதவித்‌தொகை ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய வளர்ச்சிப்‌ பணிகளை கோயமுத்தூருக்கு வழங்கி உள்ளார்.

இந்நிலையில்‌ தற்பொழுது சட்டமன்ற கூட்டத்தொடர்‌ நடைபெற்று வரும்‌ சூழ்நிலையில்‌ அனைத்து வார்டுகளிலும்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ பற்றாக்குறை, தூய்மைப்பணிகளில்‌ தொய்வு உள்ளிட்ட சூழ்நிலைகள்‌ தான்‌ நிலவுகிறது.

இதையும்‌ தாண்டி தற்பொழுது நாளை முதல்‌ தூய்மை பணியாளர்கள்‌ கால வரையற்ற வேலை நிறுத்தம்‌ செய்ய இருப்பதால்‌ மிகப்‌ பெரிய அளவில்‌ சுகாதார சீர்கேடு ஏற்படும்‌ அபாயம்‌ உள்ளது.

ஆகவே இதை தடுக்கும்‌ வகையிலும்‌ அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும்‌ வகையிலும்‌ உடனடியாக அனைவரையும்‌ அழைத்துப்‌ பேசி தூய்மை பணியாளர்களின்‌ நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...