கோவை மாநகராட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்!

கோவை மாநகராட்சியில் 6 பேருக்கு ஓட்டுநர் பணி வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கோவை மாநகராட்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்களின் தரப்பின் கருத்தை கேட்க கோரும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம், கோவை மாநகராட்சிக்கு எதிராக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் (பணிமாற்று அடிப்படையில்) ஓட்டுநராக பணிபுரியும் சமூகநீதி தூய்மை பணியாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜெயபால் மற்றும் 6 தொழிலாளர்கள் ஓட்டுநர் பணியிடம் வழங்க கோரி, ஜெயபால் உள்ளிட்ட 6 தூய்மை பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2007இல் வழக்கு தொடர்ந்தனர்.



இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயபால் உள்ளிட்ட ஏழு பேருக்கும், ஓட்டுநர் பணியிடம் வழங்க வேண்டும் என்று கடந்த 2014இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கோவை மாநகராட்சி மேல்முறையீடு செய்ததில், மேல்முறையீட்டு வழக்கில் விசாரித்த நீதிமன்றம், ஏழு பேருக்கும் ஓட்டுநர் பணி மற்றும் நிலுவை தொகையுடன் கூடிய ஓட்டுநர் ஊதியத்தை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பென்ஞ்ச் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கோவை மாநகராட்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும், பட்சத்தில் தங்களின் தரப்பின் கருத்தை கேட்க கோரும் கேவியட் மனு, ஓட்டுநர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...