உடுமலையில் திமுக நகர்மன்றத் தலைவரை பாராட்டி பேனர் வைத்த அதிமுகவினர்! - வைரலாகும் வீடியோ

உடுமலை நகராட்சியில் திமுக நகர மன்ற தலைவராக இருக்கும் மத்தீன், 32வது வார்டில் பல லட்சம் மதிப்பில் தரைமட்ட பாலம் அமைத்து கொடுத்தற்காக நன்றி கூறி பாராட்டி அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நகரமன்றத் தேர்தலில் 18 வார்டுகளை திமுக கைப்பற்றிய நிலையில் நகரமன்ற தலைவராக மத்தீன் தேர்வு செய்யப்பட்டார்.



அதிமுக 5 வார்டுகளில்மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் வேண்டுகோளை ஏற்று பல லட்சம் மதிப்பில் தரைமட்டபாலம் அமைத்து கொடுத்தஉடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்து நன்றி என 32 வது வார்டு அதிமுக எம்ஜிஆர் மன்றம் ருத்ரப்பநகர் சார்பில் பேனர் வைக்கப்பட்டது.



இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறாக ஒரு திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பேனர் வைப்பார்களா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உடுமலையில் திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பாராட்டும் விதமாக பேனர் வைக்கப்பட்ட சம்பவம் உடுமலையில் அதிமுகவினரிடையேபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...