உலக தண்ணீர் தினம் - சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கோவை ஆட்சியர் பங்கேற்பு

கோவை மாவட்டம் கணியூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வரும் காலத்தில் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கொடுப்பதற்கான முயற்சி செய்ய முடியும் என்றார்.


கோவை: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கணியூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமர் பாடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசினார்.



அப்போது அவர் பேசியதாவது:

தண்ணீர் பிரச்சனை எதிர்காலத்தில் இல்லாமல் இருக்க அதனை மக்கள் இயக்கமாக கொண்டு சென்று ஒவ்வொருவரும் பங்குதாரராக மாறி தண்ணீரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ள வேண்டும்.

திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வரும் காலத்தில் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கொடுப்பதற்கான முயற்சி செய்ய முடியும். அரசின் பல்வேறு திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் ஏற்கனவே கூறிய திட்டங்களுக்கு திட்டமிட்ட தொகை குறைவாக உள்ளது.

இதை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய காரணம் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை. இதை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் நிலத்தடி நீரில் கழிவு நீர் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும் பொதுமக்கள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தூய்மை காவலரிடம் வழங்க வேண்டும். தரம் பிரித்து வழங்கி சரியான மேலாண்மை செய்தால் மட்டுமே அந்த குப்பைகள் நீர்வழி பாதைக்கு வராமல் செய்ய முடியும்.

பிளாஸ்டிக் பொருட்களை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...