கோத்தகிரி சோதனைச்சாவடிக்கு வந்த காட்டுயானை - உயிர் தப்பிய போலீசாரின் வைரல் வீடியோ!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடிக்கு வந்த ஒற்றை காட்டு யானையிடமிருந்து இரவு பணியில் இருந்த போலீசார் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆண் காட்டு யானை ஒன்று அவ்வப்போது உலா வருகிறது. இந்த யானை சில நேரங்களில் வாகனங்களை தாக்குவது, சாலையில் வாகனங்கள் செல்ல விடாமல் வழிமறிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.



இந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று இரவு கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மாநிலநெடுஞ்சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடிக்கு வந்தது.

அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அச்சமடைந்து, அங்கிருந்த தற்காலிக செட்டிற்குள் சென்று சத்தமின்றி மறைந்து கொண்டனர்.

அங்கு சென்ற காட்டு யானை சோதனை சாவடியில் பறிமுதல் செய்து வைக்கபட்டிருந்த குடி நீர் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து மிதித்து சேதப்படுத்தியதோடு, நீண்ட நேரத்திற்கு பிறகு சோதனை சாவடியை விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...