தாராபுரம் அருகே கோயிலில் மின்சாரம் பாய்ந்து விபத்து - பூசாரி சம்பவ இடத்திலேயே பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோயிலில் எரியாத மின்விளக்கை சீரமைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கிய விபத்தில், அந்தக் கோயிலின் பூசாரி பாலசுப்பிரமணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் திருமுருகன் பூண்டி ஒன்றாவது வீதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி நகரில் வசித்து வரும் தங்கவேல் மகன் பாலசுப்பிரமணி (வயது 58). இவர் தாராபுரம் பழைய கோட்டைமேட்டு தெருவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வம்மான வீரேஸ்வரா சுவாமி திருக்கோவில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

அம்மாவாசை தினம் என்பதால் திருப்பூரில் இருந்து மதியம் கோவிலுக்கு வந்து கோவிலை சுத்தம் செய்துவிட்டு அங்கு இருந்த மின்விளக்குகளை ஆன் செய்தார். அப்போது மின்விளக்குகள் எரியவில்லை. இதனால், அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபோது அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில். பாலசுப்ரமணியம் மயங்கி கீழே விழுந்துள்ளார்.



இந்த நிலையில் கோவிலுக்கு பூஜை செய்ய வந்த பக்தர்கள் பூசாரி மயங்கி கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பாலசுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அரசு மருத்துவமனை மற்றும் சம்பவம் நடந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் பூசாரி பாலசுப்பிரமணியனுக்கு ஜமுனா ராணி 55 என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அம்மாவாசை நாளிலேயே கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி உயிழந்த சம்பவம் பழைய கோட்டைமேட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...