சூலூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதல் -டிரைவர் பலி

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் சசிகுமார்(48). ஆட்டோ டிரைவரான இவர் நண்பரான இளம்வழுதியுடன் ஆட்டோவில் குளத்துப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, லாரி மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பலியாகினார்.


கோவை: குளத்துப்பாளையம் பிரிவு அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கேரள மாநில வாலிபர் பலியாகினார்.

கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்தவர் சசிகுமார் (48). ஆட்டோ டிரைவரான சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த இளம்வழுதி (52) என்பவருடன் கேரளா நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.

குளத்துப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி ஆட்டோவின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற சசிகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோவுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இளம்வழுதியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...