தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.



அதனை தொடர்ந்து, எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செட்டிபாளையம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் 24 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் கூடத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



தொடர்ந்து, பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி சிறார் நல திட்டத்தின் கீழ் நடைபெற்ற சுகாதார முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தீத்திபாளையம் ஊராட்சியில் எஸ்.எப்.சி திட்டத்தின் கீழ் காளப்பாளையம் பகுதியில் 7.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



அப்போது, இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விவரங்களையும் கேட்டறிந்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் நியாயவிலை கடையின் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் ஜாகீர்நாயக்கன்பாளையம் ஊராட்சியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5.58 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் 3,30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பசுமைக் குடில்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் 3.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை, இக்கரை போளுவாம்பட்டியில் 1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட காளான் வளர்ப்பு குடில் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஜாகீர்நாயக்கன் பாளையம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நான்கு பயனாளிகளுக்கு வேளாண் உபகாரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்த ஆய்வின் போது வட்டார் வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...