வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை - வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு

வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.


கோவை: வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு செய்தார். வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் 450-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் வருவாய் துறையினர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.



இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் இன்று சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர், ஜே ஜே நகர், சோலையார் அணை இடதுகரை, வலதுகரை காவல் நிலையம் உட்பட்ட அனைத்து பகுதிகளும் பட்டா வழங்குவதற்கு பெயர் மற்றும் விலாசங்களை ஆய்வு செய்தார்.



மேலும் சோலையார் அணை பகுதியில் பராமரிக்கப்பட்டுள்ள அணையின் மீன் வளர்ப்பு பகுதிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வு பணியின் போது வால்பாறை வட்டாச்சியர் ஜோதிபாசு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...