கோவையில் பிரபல அரிசி கடத்தல் வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கோவை உக்கடத்தில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,250கிலோ ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான நிஜாமூதின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: உக்கடம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் ஜிஎம் நகரில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனிலிருந்து சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கேரளாவிற்கு கடத்தப்படுவதாக பொள்ளாச்சி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் குடோனில் சோதனை செய்து போது, 45 கிலோ வீதம் 50 மூட்டைகளில் சுமார் 2,250 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளரான போத்தனூர், திருமறை நகரை சேர்ந்த நிஜாம் (எ) நிஜாமூதீன் என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி பரிந்துரையின்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், நிஜாமுதீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆணையை வழங்கினார்.

அதன்படி இன்று கோவை மத்திய சிறையில் உள்ள நிஜாமுதீனுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை சார்வு செய்யப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...