கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!

கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் நடைபெற்ற மகளிர் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக “நம்ம ஊரு கொண்டாட்டம்” என்ற தலைப்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பரத நாட்டிய நிகழ்ச்சி, சிலம்பாட்டம் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம், விளையாடுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.



இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் பேசுகையில், வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளை பின்பற்றி வாழும் குழந்தைகள் ஆளுமை மிக்கவர்களாக வளர்கிறார்கள். பெண்கள் தங்களின் சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும், தன்னிச்சையாக செயல்படுவதும், ஆற்றல் பொருந்தியவர்களாகவும் இருப்பது மிகச்சிறந்த உழைப்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது, என்றார்.



அவினாசிலிங்கம் கல்லூரி பேராசிரியர் அகிலாண்டேஸ்வரி பேசுகையில், அனைவரும் உடற்பயிற்சி செய்வது யோகா பயிற்சி செய்வது மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழி வகுக்கும், என்றார்.



இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் லயன் சுபா சுப்பிரமணியம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அனிதா தேவி மனித வள மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வியறிவு பயிற்சியாளர்கள் பற்றிய குறிப்புகளை வழங்கினார்.



இளம் வழக்கறிஞர் அன்பு செல்வம், சட்டம் அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இறுதியாக விழா ஒருங்கிணைப்பாளர் சோபா நதியா நன்றி உரை நிகழ்த்தினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...