கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது

கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), சனீப் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து ரோந்து பணிகளை மேற்கொண்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்வபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள பொது கழிப்பறை அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் திடீரென ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்த போது அவர்கள் டைப்போல், நிட்ராஷிபாம் என போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட இருவரும் கோவை கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), உக்கடம் பகுதியை சேர்ந்த சனீப் (30) என்பதும் இவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...