கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), சனீப் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவை: செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து ரோந்து பணிகளை மேற்கொண்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செல்வபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள பொது கழிப்பறை அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் திடீரென ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்த போது அவர்கள் டைப்போல், நிட்ராஷிபாம் என போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் பிடிபட்ட இருவரும் கோவை கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), உக்கடம் பகுதியை சேர்ந்த சனீப் (30) என்பதும் இவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து ரோந்து பணிகளை மேற்கொண்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செல்வபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள பொது கழிப்பறை அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் திடீரென ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்த போது அவர்கள் டைப்போல், நிட்ராஷிபாம் என போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் பிடிபட்ட இருவரும் கோவை கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), உக்கடம் பகுதியை சேர்ந்த சனீப் (30) என்பதும் இவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.