கோவை அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

விளாங்குறிச்சி அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் ஐடி ஊழியர்களை இறக்கி விட்டு சென்ற இன்னோவா கார், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கோவை அடுத்த விளாங்குறிச்சி சாலை பால்காரர் தோட்டம் பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் இன்னோவா கார் ஒன்று ஐ.டி. நிறுவன ஊழியர்களை இறக்கி விட்டு திரும்பியுள்ளது.

அப்போது அந்த வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.



அப்போது திடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் மின் கம்பம் முறிந்து மின் கம்பிகள் துண்டானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். விபத்து நடந்தவுடன் மின் விநியோகம் உடனடியாக தடைபட்டதாலும், அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.



இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், புதிய மின் கம்பிகளை மாற்றி, மின் கம்பத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...