பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்று கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கல்!

பட்ஜெட்டில் கோவை மாவட்டத்திற்கு நவீன செம்மொழி பூங்கா மற்றும் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ஆகிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பீளமேடு அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


கோவை: தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை மற்றும் கோவையில் நவீன செம்மொழி பூங்கா, மெட்ரோ ஆகிய அறிவிப்புகளை வரவேற்று மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், கோவையில் நவீன செம்மொழி பூங்கா, கோவைக்கு 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மெட்ரோ ரயில் திட்டம் போன்ற எண்ணற்ற புதிய திட்டங்களை இன்று பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்புகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின் படி, கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் நா. கார்த்திக் வழிகாட்டுதலின் படி பீளமேடு ராதாகிருஷ்ணன் மில் சிக்னல் அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பீளமேடு பகுதி கழக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட்ட கழக செயலாளர்கள் சபரி தன்ராஜ், ஆ. மாடசாமி, மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், பகுதி கழக நிர்வாகிகள் பூவை துரைசாமி, பந்தல் ரவி, ஜெயராஜ், லக்ஷ்மி

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. தனபால், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கா. மணிகண்டன், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞரணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...