கோவை அசோகபுரம் பள்ளியில் சிட்டுக்குருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை அருகேயுள்ள அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத் துறை மற்றும் சிட்டுக்குருவிகள் அறக்கட்டளையினர் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.



கோவை: அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனியிலுள்ள அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தினர், சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத் தலைவர் கேசவசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை நிறுவனர் தனசேகர் முன்னிலை வகித்து சிட்டுக்குருவிகள் எப்படி வளர்க்க வேண்டும், பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.



இதில் பொறியியல் கல்லூரியிலிருந்து வந்த சிட்டுக்குருவிகள் விழிப்புணர்வு பேருந்து வாகனத்தில் ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகள் வரைந்த சிட்டுக்குருவிகள் பற்றியான ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் பறவைகளின் சத்தம் அடங்கிய ஆடியோக்கள் லேப்டாப் மூலம் போடப்பட்டு காண்பிக்கப்பட்டது.



கல்லூரி மாணவ, மாணவிகள் சிட்டுக்குருவி மற்றும் கிளி மாதிரியான வேடமிட்டு பறவைகள் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இதில் பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராக பேருந்தில் ஏறி அங்கிருந்த ஓவியங்களை பார்த்தும், அதுகுறித்தான தகவல்களை கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...