உடுமலை அருகே சரக்கு வேன்கள் மோதல் - கிளீனர் உயிரிழப்பு

உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சரக்கு வேன் ஒன்று முன்னால் சென்ற மற்றொரு வேனை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் கிளீனர் நாகராஜ் என்பவர் பலியானார்.


திருப்பூர்: உடுமலை அருகே சரக்கு வேனை முந்த முயன்ற மாற்றொரு சரக்கு வேனின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மகன் நாகராஜ் (24). இவருக்கு திருமணமாகி சினேகா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர் குடிமங்கலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு காய்கறி ஏற்றிச்சென்ற சரக்கு வேனில் கிளீனராக சென்றுள்ளார். அந்த வண்டியை திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசபாண்டி என்பவர் ஓட்டியுள்ளார்.

அந்த சரக்கு வேன் குடிமங்கலத்தையடுத்த சுங்காரமடக்கு பிரிவு அருகே சென்றபோது முன்னால் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு வேனை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக சிமெண்ட் வேனின் பின்புறத்தில் காய்கறி வேன் மோதியது.

இதில் காய்கறி வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய நாகராஜ் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நாகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாகராஜின் மனைவி அளித்த புகாரின் பேரில் குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...