கோவையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது!

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஒண்டிப்புதூர், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலணி மற்றும் நீலிகோணாம்பாளையம், உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலியை சேர்ந்த குரூஸ் சகாயராஜ் எனவரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 3 ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நெசவாளர் காலணி பகுதியில் நடந்து சென்ற பெண்ணுன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்றுபேர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நெசவாளர் காலணி பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் மூன்றுபேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவந்த போலிசார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றிவந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த குரூஸ் சகாயராஜ் என்பதும் சிங்காநல்லூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.



இந்த நிலையில் சிவகங்கையை சேர்ந்த அவனது நண்பர்கள் இருவர் சமீபத்தில் இவனுடன் சிறிதுநாள் தங்கியிருந்து மூவரும் சேர்ந்து அந்த பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் இவனுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கடந்த வாரம் சிவகங்கை போலிசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.

அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குரூஸ் சகாயராஜை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...