தாராபுரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து - 22 பேர் காயம்!

தாராபுரம் அடுத்த சோமனூத்து பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் சத்திரம் பகுதியில் கூலி வேலைக்குச் சென்று திரும்பிய சிக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 22பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: தாராபுரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளர்கள் 22 பேர் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள தளவாய் பட்டிணம் பஞ்சாயத்துக்குட்பட்ட சிக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சத்திரம் பகுதிக்கு வெங்காயம் அறுவடைக்கு சென்று விட்டு மாலை சரக்கு வாகனத்தில் வீடு திரும்பினர்.

இவர்கள் பயணித்த சரக்கு வாகனம் சோமனூத்து என்ற இடத்தில் வந்த போது, பின்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய வாகனம் சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த லட்சுமி, முருகம்மாள், ஈஸ்வரி, மாரியம்மாள், காளியம்மாள் உட்பட 18 பேருக்கு லேசான காயமும், 4 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.



பலத்த காயமடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் தாராபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சாலை விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...