பழங்குடியின மக்களின் நலனை தமிழக அரசு காத்து வருகிறது - அமைச்சர் கயல்விழி பெருமிதம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 14ஆவது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.


கோவை: பழங்குடி மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் 14ஆவது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பங்கேற்றார். இதில், மாநகராட்சி ஆணையர் பிரதாப்குமார், நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குநர் செந்தில் குமார், பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நிகழ்வில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பழங்குடி மாணவர்கள் இந்நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.



மேலும், நடனப் போட்டி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.



இந்நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது, காடுகளை பாதுகாப்பதில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியின பிரிவுகள் உள்ளன. இவர்களது நலனுக்காகவும், வாழ்க்கை தர மேம்பாட்டிற்காகவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பழங்குடியின மக்களின் மொழி, கலாச்சாரம் ஓவியம் ஆகியவற்றை பாதுகாக்கவும் மேம்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்காகவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பழங்குடியின மக்கள் தங்களது இடத்திலிருந்து வெளியூர் செல்ல பொதுவாக விரும்ப மாட்டார்கள். அதனால் மற்ற மக்களோடு பின்தங்கி இருப்பார்கள். இந்நிலையில் பழங்குடியின மக்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கும் வகையில், அவர்களுக்கான வருமான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

18 பழங்குடியின மாணவர்களை வெளிநாட்டிற்கு சென்று படிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், பழங்குடியின மக்களுக்காக வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அவர்களை பங்கேற்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் கல்வி கற்பதில் சிக்கலாக உள்ள சாதி சான்றிதழ் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் விரைவாக சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...