கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க ஆலோசனை கூட்டம்

கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் குரும்பர் இன மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



கோவை: குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

கோவையில் நடைபெற உள்ள குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலை. ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.



குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குரும்பர்‌ இனத்தை பழங்குடியின பட்டியலில் இணைப்பது, அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது, கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்க தலைவர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ள குரும்பர் இன மக்களுக்கு அரசியல் மற்றும் அதிகார பிரதிநிதித்துவம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

குரும்பர் இன மக்களை அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தால் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க கூடிய சூழல் உருவாகும். குரும்பர் இனத்தை சேர்ந்தவர்கள் மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவதற்கான முன்னெடுப்பைச் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...