உடுமலை நகராட்சியில் வேலை தருவதில் பாரபட்சம் - அமைச்சர் முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் புகார்!

உடுமலை நகரமன்ற அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் வேலைகள் முறையாக நடைபெறவில்லை என்றும், திட்டமிட்டு சில வார்டுகள் ஒதுக்கப்படுவதாக முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் திட்டமிட்டு சில வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக திமுக கவுன்சிலர்கள் அமைச்சரிடம் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலை நகராட்சி பகுதிகளில் அரசு திட் டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வீனித் மற்றும் அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்.



இக்கூட்டத்தில் பேசிய திமுக நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் அனைத்து வார்டுகளுக்கும் முறையாக வழங்கப்படுவதில்லை. சில வார்டுகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பகிறது.நகர மன்ற ஒப்பந்த குழு, தலைவருக்கு தெரியாமல் ஒப்பந்தங்கள் ஏலம் விடப்படுகிறது என்று புகார்களை தெரிவித்தனர்.

மேலும் உறுப்பினர்கள் பேசுகையில், உடுமலை ஐஸ்வர்யா நகரில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மருத்துவ சங்கத்தினர் வியாபார நோக்கத்தில் கட்டியுள்ளனர். அதை அகற்றிவிட்டு நகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்க வேண்டும்.

நகராட்சிக்கு சொந்தமான வார சந்தையில் இருக்கும் கடைகளை உள் வாடகைக்கு விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், ஆழ்குழாய் மற்றும் கிணறுகளில் இருந்து லாரிகளில் மூலம் தண்ணீர் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தளி மேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். நகராட்சியில் பணி புரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...